நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் யாகம் ஓமம் செய்யும் சாமி ஒருவர் வழங்கிய இளநீர் குடித்தமையினால் உயிரிழந்துள்ளார் என நானுஓய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி உயிரிழந்த நபர் நுவரெலியா பொலிஸ் பிரிவில் வசிக்கும் தோமஸ் மூதியப்பன் என்ற 64 வயதான 3 பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் சாரதியாக அவர் பணியாற்றுகின்றார். அவர் தனக்கு ஏற்பட்ட நோய் தொடர்பில் மந்திரவாதி ஒருவரை சந்திப்பதற்காக தனது மகளுடன் சென்றுள்ளார். குறித்த நபர் 5 இளநீர் வெட்டி முழுமையாக குடிக்குமாறு கூறியுள்ளார்.
அதற்கமைய குடிக்க ஆரம்பித்த நபர் 3வது இளநீர் குடிக்கும் போதே கழிப்பறை செல்ல வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் மீண்டும் அவர் அதனை குடித்த போது மயங்கிவிழுந்து நுவரெலியா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அவரது மகள் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.