காதலியின் முத்தத்திற்க்காக பெண்ணாக மாறிய இளைஞன்.!

சென்னையில் இருக்கும் பட்டாபிராம் பகுதியை சார்ந்தவர் சக்திவேல். இவர் ஐ.டி.ஐ கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு காதலியாக இளம்பெண் ஒருவர் இருக்கிறார். கடந்த 14 ம் தேதியன்று கொண்டாடப்பட்ட காதலர் தினத்தில் தனது காதலியை சென்னையில் இருக்கும் மெரினா கடற்கரையில் வைத்து சந்தித்துள்ளார்.

அந்த சமயத்தில் காதலர் தின பரிசாக முத்தம் ஒன்றை காதலியிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். அதன் படி., பெண் போன்று பர்தா வேடமிட்டு., இராயப்பேட்டையில் இருக்கும் மெரினா கடற்கரைக்கு வரசொல்லியிருக்கிறார்.

அவ்வாறு பர்தா அணிந்து வரும் பட்சத்தில்., ஆசையாக கட்டியணைத்து முத்தமிடுவதாக தெரிவித்துள்ளார். இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட சக்திவேல்., பர்தா வேடம் போட துவங்கினார்.

அதன்படி., நேற்று மாலை இராயப்பேட்டையில் இருக்கும் பெண்ணின் வீட்டில் இருந்து மெரினா கடற்கரைக்கு பர்தா அணிந்து நடந்து சென்று கொண்டு இருந்தார். இவரை எதிர்பார்த்து மெரினாவில் அவரது காதலி காத்துகொண்டு இருந்தார்.

அங்குள்ள ஐஸ்ஹவுஸ் பகுதியில் பார்த்தவுடன் நடந்து செல்லவே., இவரின் நடை மற்றும் உடையை கண்ட பொதுமக்கள் சந்தேகமடைந்தனர். மேலும்., போக்கிரி படத்தில் வடிவேல் நகைச்சுவை போலவே., “விதவிதமான கெட்டப்பில் வந்தாலும் மண்டையில் உள்ள கொண்டையை மறந்துவிட்டேன்” என்ற நகைச்சுவைக்கேற்ப., ஆண்களின் காலனியை அணிந்து சென்றுள்ளார்.

இவரின் நடை மற்றும் உடையை கண்டு சந்தேகமடைந்த பொதுமக்கள் காலனியை கண்டவுடன் திருடன் என்று நினைத்து அவரை பிடித்து சரமாரியாக அடிக்க துவங்கினர். பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் அவரை அழைத்து கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் காதலியின் முத்தத்திற்க்காக பர்தா அணிந்து சென்றது தெரியவந்தது., இதனையடுத்து சக்திவேலின் காதலியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.