வங்காளதேசம், டாக்காவின் பழமையான பகுதியான சாவ்க்பஜார் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பகுதி, இரசாயன பண்டகசாலையாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ரசாயன பண்டகசாலையில் ஏற்பட்ட இந்த தீ சட்டென்று அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியிலும் , தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதுகுறித்து விசாரணைமேற்கொண்ட போலீசார், கேஸ் சிலிண்டரில் தீ பற்றி இந்த விபத்து நேர்ந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, இதேபோன்று கடந்த 2010 ஆம் ஆண்டு டாக்காவில் இரசாயன பண்டகசாலை ஒன்றில் தீ விபத்து 120 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.