விரையும் காவல்துறையினர் – தொடங்கும் அதிரடி நடவடிக்கை.!

தமிழகத்தில் குட்கா, புகையிலை பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும் பல இடங்களில் குட்காபொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன.

இவை வடமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.

பூந்தமல்லி அருகே லாரிகளில் குட்கா பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.பூந்தமல்லி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பாரிவாக்கம் ஜங்ஷனில் 2 லாரிகளில் இருந்த பொருட்களை சிலர் லோடு ஆட்டோவில் மாற்றி ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சோதனை செய்ய சென்ற போது லோடு ஆட்டோவில் இருந்த 2 வாலிபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். 2 லாரிகளில்தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருந்தன.

இதையடுத்து சுமார் 5 டன் குட்காவை பறிமுதல் செய்தனர். லாரியில் இருந்த 2 வடமாநில வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

2 லாரி மற்றும் லோடு ஆட்டோ பறிதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 2 லாரிகளும்குஜராத் பதிவு எண் கொண்டது. இது தொடர்பாக கைதான2 வாலிபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.