இளைஞர்களிடம் கோரிக்கை விடுத்து கமல் போட்ட ட்வீட்!

இந்தியாவை வலிமைமிக்கதாக உருவாக்க இளைஞர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் இளம் மனதில் எப்போதும் ஓர் ஆசை பட்டியல் உள்ளது. மேலும் நேரத்தாலும் பெரும் பட்டியல் உருவாகியிருக்கும்.அதில், நீங்கள் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை மிக உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். என் நண்பர்கள் பலர் மோசமாக இருந்தனர். அவர்கள் வாக்களிக்கவில்லை என்பதால் தான், இப்போது நாம் விளைவுகளை அனுபவிக்கிறோம்.

வாக்களிக்கும் உரிமை நமது விதியை வடிவமைக்கிறது. ஆகவே, பொறுப்புடன் நாட்டின் சுதந்திரத்தை வடிவமைக்கத் தொடங்குவோம். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை இளைஞர்கள் இணைத்து கொண்டால், வலிமைமிக்க இந்தியாவை உருவாக்குவதற்கு உதவியாக இருக்கும் இவ்வாறு கமல்ஹாசன் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.