வேலைக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை: நடிகை பானுப்பிரியா மீது புகார்

நடிகை பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக ஆந்திர பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பானுப்பிரியாவின் வீட்டில் வேலைபார்க்கும் 14 வயது சிறுமியின் தாயார் பிரபாவதி ஆந்திர காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில்,

வீட்டின் வறுமை காரணமாக, என்னுடைய மகள் 14 வயது மகள் சந்தியாவை திரைப்பட நடிகை பானுப்பிரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தேன். மாதம் 10,000 ரூபாய் சம்பளம் கொடுப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் அழைத்துச் சென்று 18 மாதங்கள் கடந்தும் அவர்கள் சம்பளம் கொடுக்கவில்லை, ன்னுடைய மகள் வேறொருவரின் போன் மூலம் என்னை தொடர்பு கொண்டு, பானுப்பிரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் என்பவர் தன்னை மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார் என்று தெரிவித்தாள்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான், கடந்த 18-ஆம் தேதி உடனடியாக பானுப்பிரியாவின் விட்டிற்கு சென்றேன்.

அவர்கள் எங்களிடம் பணம் உள்ளது, செல்வாக்கு இருக்கிறது, உன் மகள் மீது திருட்டு குற்றம் சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம் என்று மிரட்டி அனுப்பி வைத்தனர்.

இதனால் பொலிசார் இதில் தலையிட்டு தங்களுக்கு நீதி கிடைக்க உதவும் படி குறிப்பிட்டுள்ளனர். பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், பானுப்பிரியாவிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.