சென்னையில் ஈக்காட்டு தாங்கலில் உள்ள தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வருபவர் சுஜிதா.
அடிக்கடி முகநூல் சாட்டிங்கில் மூழ்கி கிடந்த சுஜிதாவுக்கு சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த வேலூர் லத்தேரி அரும்பாக்கத்தை சேர்ந்த மனோஜ்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து ஊர் திரும்பிய மனோஜ்குமார், சுஜிதாவை நேரில் சந்தித்து காதலை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மனோஜ்குமாரை நம்பி தனது வாழ்வை ஒப்படைத்துள்ளார் சுஜிதா, இருவரும் லாட்ஜில் அறை எடுத்து ஒன்றாக கழித்ததாகவும் கூறப்படுகின்றது. திருமணம் செய்து கொள்ள போகிறவர்தானே என்று மனோஜ்குமாருக்கு இடம் கொடுத்ததால் சுஜிதா கற்பை இழந்துள்ளார்.
இந்நிலையில் மனோஜ் தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதால் சுஜிதாவை திருமணம் செய்துகொள்ள முடியாது என மறுத்துவிட்டார்.
இதற்கிடையே மனோஜ்குமார் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்வதாக தகவல் அறிந்த சுஜிதா, வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்துக்கு சென்று தனக்கு உரிய நீதிவழங்க கோரியும் தன்னை ஏமாற்றிய முக நூல் காதலன் மனோஜ்குமாரை கைது செய்ய கோரியும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மனோஜ்குமாரை காவல் நிலையம் அளித்து விசாரித்தபோது, சுஜிதாவுக்கு நான் நிறைய செலவு செய்துள்ளேன். அவரது விருப்பத்தின் பேரிலேயே எல்லாம் நடந்தது என்றும் விளக்கம் அளித்த அவர் சுஜிதாவை திருமணாம் செய்ய இயலாது என்றும் கூறி உள்ளார்.
இதையடுத்து இருவரும் தனியாக பேசியதில் ஏற்பட்ட உடன்பாட்டில் சுமூகமாக பிரிந்து செல்வது என்று முடிவெடுத்துக் சுஜிதா தனது புகாரை வாபஸ் பெற்றார்.
சுஜிதா, இதே போல சிலமாதங்களுக்கு முன்பு தன்னுடன் பணிபுரியும் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு இளைஞர் மீதும் காதலித்து ஏமாற்றியதாக புகார் அளித்து வாபஸ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.