கண்ணீருடன் இறுதிச்சடங்கு நடத்திய குடும்பம்! 4 நாட்களில் உயிருடன் வந்த இளம்பெண்

இந்தியாவில் தன் மகள் இறந்துவிட்டதாக பெற்றோர்கள் இறுதிச்சடங்கு நடத்திய நிலையில், நான்கு நாட்களுக்கு பின் அவர் உயிருடன் திரும்பிவந்துள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்த பெண் நைனா, 20 வயது மதிக்கத்தக்க இவர் கடந்த 8ம் திகதி காணாமல் போயுள்ளார்.

எங்கு தேடியும் கிடைக்காததால் இவரது குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்தனர். நான்கு நாட்களுக்கு பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

விசாரணையில் அது நைனா தான் என அவரது குடும்பத்தினர் கூறியதால், சடலத்தை ஒப்படைத்த பொலிசார் மேலதிக விசாரணை நடத்தினர்.

நைனா இளைஞர் ஒருவர் ஓடிவிட்டதாகவும், அவரே கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகித்தனர்.

இந்நிலையில் நைனா என நினைத்து குடும்பத்தினர் இறுதிச்சடங்கும் நடத்தி முடித்த நிலையில், நான்கு நாட்களுக்கு பின்னர் அதே இளைஞருடன் திரும்பி வந்துள்ளார்.

இதைபார்த்த குடும்பத்தினரும், பொலிசாரும் அதிர்ச்சி அடைந்தனர், இதற்கிடையே இறந்ததாக கருதப்படும் பெண்ணின் டிஎன்ஏவை கொண்டு அவர் யார் என்பதை கண்டுபிடிக்க பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.