தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்து பழம்பெரும் நடிகையாக இருப்பவர் கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரசுவதி சரோஜா தேவி.
சரோஜா தேவி இன்று சென்னையில் நடந்த திருவையாறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.அப்போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வாநாதனின் மெழுகு சிலையை முதல்வர் திறந்து வைத்து பேசினார்.
பின்னர் நிகழ்ச்சியில் நடிகை சரோஜாதேவி சிறப்புரையாற்றினார். அப்பொழுது கூறியதாவது: நான் இதுவரை பார்த்த முதல்வர்களில் முகத்தில் எப்போதும் புன்சிரிப்போடு இருப்பவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. மற்றவர்கள் சிடு சிடுவென இருப்பார்கள். தமிழகத்திற்கு என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருக்க வேண்டும்.
மேலும் எடப்பாடி அவர்கள் எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.