“இனி மேலாவது திருந்துங்க…” – பா.ஜ.க. பற்றி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்தார் தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“மக்கள் பா.ஜ.க. அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் தான், நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில், பா.ஜ.க. பெரும் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.

தான் செய்த தவறுகளை பா.ஜ.க. திருத்திக் கொள்ள வேண்டும். பா.ஜ.க. காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கு, தமிழகத்தில் செல்வாக்கு கிடையாது. இங்கு திராவிடக் கட்சிகள் மட்டுமே வெற்றி பெறும்.

வைகோ ஒரு போராளி தான். ஆனால், இப்போது அவருக்கு நேரம் சரியில்லை. அதனால் தான் அவர் செல்லும் இடமெல்லாம் பிரச்சினை வருகிறது.

வரப்போகிற, இடைத் தேர்தலில், 20 தொகுதிகளிலும், அதிமுக மகத்தான வெற்றி பெறும்”.

இவ்வாறு தனது பேட்டியில் செய்தியாளர்களிடம் கூறி உள்ளார், தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.