யாழ்.சாவகச்சேரி மரக்கறி சந்தையில் காட்டு விலங்கின் இறைச்சியை விற்ற வியாபாரியை கடுமையாக எச்சரித்து மூவாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபரை நேற்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே தண்டப்பணம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.சாவகச்சேரி மரக்கறி சந்தையில் வியாபரி ஒருவர் காட்டு விலங்கின் இறைச்சியை விற்பனை செய்கின்றார் என கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர் பி.தளிர்ராஜ் குறித்த வியாபாரியிடம் இருந்து மூன்று கிலோ இறைச்சியை கைப்பற்றினார்.
அதனை அடுத்து நேற்றைய தினம் கைப்பற்றப்பட்ட இறைச்சியையும், குறித்த வியாபாரியையும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போது, வியாபாரி தனது குற்றத்தை ஏற்றுகொண்டதை அடுத்து, வியாபாரியை கடுமையாக எச்சரித்த நீதிவான் 3 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தார்.