பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் தனது விவாகரத்து குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தேஜ் பிரதாப்க்கும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.வான சந்திரிகாராயின் மகள் ஐஸ்வர்யாராய்க்கும் மே 12 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் நகரத்து வாழ்க்கையை விரும்பும் மொடல் பெண் என்றும் தான் எளிமையான வாழ்க்கையை விரும்புபவன், இதனால், எனக்கும் அவருக்கும் திருமண உறவில் நீடிக்கமுடியவில்லை என்று விவாகரத்து கோரினார் தேஜ்.
இவரின் இந்த முடிவுக்கு, தேஜ்ஜின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, ஐஸ்வர்யாராய்க்கு ஆதரவாக பேசிவந்தனர்.
ஆனால், தான் விவாகரத்து தரும்வரை நான் வீடு திரும்பமாட்டேன் என கூறி ஆசிரமத்தில் தங்கிவந்த தேஜ், நவம்பர் 2 ஆம் திகதி விவாகரத்து கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், உடைந்து போன உறவுகளை ஒருபோதும் இணைக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.