இந்திய வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், சென்னையில் இன்று முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் கூறியதாவது, வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது தாழ்வு மண்டலமாக மாறுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும். மேலும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற உள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னையில் சென்னை, அம்பத்தூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், வடபழனி, கோயம்பேடு, மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவான்மியூர், மீனம்பாக்கம் தாம்பரம், பெருங்குடி, போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.