கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. தற்போது அம்மாநிலத்தில் மனோகர் பரிக்கர் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். அண்மையில் இவர் கணைய தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக வெளிநாடு சென்று சிகிச்சைபெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் அடுத்த 48 மணிநேரத்தில் கோவாவின் முதல்வராக இருக்கும் மனோகர் பரிக்கர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, மனோகர் பரிக்கர் வீட்டை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
மனோகர் பரிக்கர் பதவி விலக வேண்டும் எனவும், என வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர். இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
மனோகர் பரிக்கர் நோய்வாய்ப்பட்டு, 9 மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்து வருவதால் அரசு நிர்வாகம் சரியாக இயங்கவில்லை. இதனால் அவர் பதவி விளக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, முதல்வரின் இல்லம் நோக்கி சென்ற இந்த பேரணி நடைபெற்ற போது, பரிக்கர் வீட்டின் அருகே 100 மீட்டர் தொலைவில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.