இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அறிவித்தல்!

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுகளில் செல்லலாம் என்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிரகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

ஏற்கனவே அவுஸ்திரேலியாவுக்கான கடல் போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளது.

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன இதனையும் மீறி அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் செல்ல முயன்றால் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவர்.

 எனவே விளம்பரப்படுத்தப்பட்டபடி எவருக்கும் அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் செல்ல முடியாது என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரேஸ் ஹட்செசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த ஐந்து வருடங்களில் மாத்திரம் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் செல்ல முயன்ற 2525 பேர் தடுக்கப்பட்டனர். 614பேர் கைது செய்யப்பட்டனர் என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்