தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளகாதல் தொடர்பான குற்ற சம்பவங்கள் அதிகரித்துகொண்டே செல்கிறது.
சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கள்ளகாதல் விவாகரங்கள் விபரீதமான விளைவில் தான் சென்று முடிவதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
சமீபத்தில் வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த 20 வயதான இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த 26 வயதான வாலிபர் ராஜசேகரன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இடையில் நெருங்கி பழகிய காதல் ஜோடி நேரம் தனிமையில் சந்திக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் நிலையை உணர்ந்து கொண்ட பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி வாலிபரிடம் கூறியுள்ளார்.
அவரும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மேலும் மேலும் இளம்பெண்ணிடம் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
சில நாட்களுக்கு பிறகு இளம்பெண் வாலிபரின் மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயபடுத்தி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அந்த பெண்ணை பார்ப்பதை முற்றிலுமாக தவிர்த்து வந்துள்ளார் அந்த வாலிபர்.
இதையடுத்து அந்த பெண் அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது தான் தெரியவந்தது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகனும், இரண்டு மகள்கலும் உள்ளனர் என்று.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் மேற்கொண்டு ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.