கள்ளகாதலியின் நடத்தையில் சந்தேகம்.!! விடிய விடிய விளக்கருகில் காத்திருந்த கள்ளக்காதலன்.!!

திருச்சி மாவட்டம் சோமரசப்பேட்டையை சார்ந்தவர் ரெங்கராஜன். இவரின் மகன் நடராஜ் (31)., இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், குளித்தலையில் உள்ள அழகானம்பட்டிக்கு பணிக்கு செல்வது வழக்கம். அவ்வாறு பணிக்கு செல்லும் போது அந்த பகுதியை சார்ந்த லீலா (வயது 35) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதியை சார்ந்த பெண்ணான லீலாவிற்கு கணவர் 12 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில்., 10 வயதுடைய மகன் இவருக்கு இருக்கிறார். கணவரின் ஆதரவும் இல்லாததால்., கட்டிட வேலைக்கு சென்று தனது மகனை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில்., இவர்கள் இருவரும் கட்டிடப்பணியில் பணியாற்றுபவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி., இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அப்போது லீலா வேறு சில நபர்களுடன் அடிக்கடி அலைபேசியில் பேசி வந்ததை கவனித்த நடராஜ் கண்டித்துள்ளார். மேலும் இது குறித்து அவரிடம் பேசுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது இவர்கள் இருவரும் நடத்திய பேச்சு வார்த்தையில்., இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு., ஆத்திரமடைந்த நடராஜ் வீட்டில் இருந்த அம்மியை லீலாவின் தலையில் போட்டுக்கொலை செய்துள்ளார். ஆத்திரத்தில் கொலை செய்த அவர் செய்வதறியாது பிணத்தின் அருகே விடிய விடிய இருந்துள்ளார்.

தனது மகனை காண்பதற்க்காக நடராஜின் தயார் வீட்டிற்கு வந்த போது., லீலா கொலை செய்யப்பட்டு கிடப்பதையும்., அருகில் உக்காந்திருந்த மகனையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அவரே தாமாக காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

காவல் நிலையத்தில் சரணடைந்த நடராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தனது கள்ளக்காதலியை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.