தமிழக முதல்வர் பரபரப்பு பேட்டி! சர்கார் விவகாரத்தில் நடந்தது என்ன? யார் காரணம்?

சன் பிக்சர்ஸ் தயாரித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “சர்கார்” படம் தீபாவளியன்று வெளியானது. படத்தின் முதல் பார்வை வெளியானது முதல் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.

தீபாவளி அன்று வெளியான இந்த படத்திற்கு, விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயத்தில் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை தீயிட்டு கொளுத்துவது போலவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களில் இயற்பெயரை கதையில் வில்லிக்கு வைத்துள்ளதாகவும் சர்கார் படத்திற்கு எதிராக அதிமுக கட்சியினர் போர்க்கொடி தூக்கவே பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

மேலும், இந்த படத்திற்கு அதிமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். நேற்று அதிமுக தொண்டர்கள் சர்கார் திரைப்படம் வெளியான திரையரங்களுக்கு சென்று போராட்டம், கல்வீச்சு, பேனர் கிழிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட துவங்கினர்.

படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் செய்யாவிடில் பெரும் பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். இதனை அடுத்து இந்த படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்கம் செய்வதற்கு படக்குழுவும்., தமிழக திரையரங்குகள் சங்கத்தினரும் உறுதி அளித்தனர்.

இந்நிலையில், ”அதிமுக தொண்டர்களோடு சேர்ந்து பொதுமக்களும் போராடியதால் தான் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கினார்கள்” என்று சற்றுமுன் கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், தலைவர்களின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால், தொண்டர்கள் கொதித்து எழத்தான் செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.