தன்னையும் தற்கொலை எண்ணம் வாட்டியதாக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.
“எனது 25 வயது வரை, தற்கொலை எண்ணம் எனக்குள் வந்துள்ளது. அவ்வப்போது நம்மில் பலரும், நாம் சிறப்பானவன் கிடையாது என்று நினைக்கிறோம். நான் என் தந்தையை இழந்ததால் அவ்வாறு உணர்ந்துள்ளேன். பல நிகழ்வுகள் அதன்பின் நடந்து கொண்டிருந்தது. அவை எல்லாமும் செயலற்று போயிருந்தது.
நான் என் தந்தையும் இறந்து விட்டதால், அதிக திரைப்படங்களை ஏற்கவில்லை. எனக்கு 35 திரைப்படங்களில் வாய்ப்பு வந்தது. நான் அவற்றில் இரண்டை மட்டுமே தேர்வு செய்தேன்.
எனக்குள் இந்த எண்ணம் ஒருவிதத்தில் தைரியத்தை வரவைத்தது. மரணம் அனைவருக்கும் பொதுவான ஒன்று. எல்லாவற்றுக்கும் முடிவு காலம் என்று ஒன்று இருக்கும்போது, ஏன் பயம் கொள்ள வேண்டும்?
எனக்குள் என் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகள், தைரியத்தை ஏற்படுத்தின” என்று ஏ.ஆர். ரஹ்மான் தன் வாழ்வில் ஏற்பட்ட இக்கட்டான கால நிகழ்வுகளை தன் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் கூறினார்.