ஆடியோவை கேட்டு கதறும் தாய்.. புகைப்படத்தை பார்த்த உடனே மரண அதிர்ச்சி!

பட்டுக்கோட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவர் மலேசியாவில் உள்ள சலூன் கடை ஒன்றில் கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக அவர் அங்கு துன்புறுத்தப்படுவது போல காட்சிகள் அடங்கிய புகைப்படம் அவரது குடும்பத்திற்கு வந்து கொண்டே உள்ளது.

அதில் ஒரு ஆடியோவில் என்னை அடித்து காயப்படுத்துகிறார்கள் எப்படியாவது வந்து என்னை காப்பாற்றுங்கள் என்று கதறுகிறார்.

வீரப்பன் என்ற அந்த இளைஞர் அங்குள்ள சிலர் தன்னை துன்புறுத்துவதாகவும், சொந்த ஊருக்கே திரும்பி சென்று விடுவதாகவும் சலூன் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

விரைவில் அனுப்பி வைக்கிறேன் என்று கூறி அந்த சலூன் கடைக்காரர், இரண்டு லட்சம் ரூபாயை வீரப்பன் கையாடல் செய்து விட்டதாக கூறி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் ஊருக்கு அனுப்பி வைப்பேன் என்று மிரட்டி தினம் தினம் அடித்து காயப்படுத்திக்கொண்டே உள்ளனர்.

இந்த புகைப்படத்தையும், சில ஆடியோக்களையும் வீரப்பன் வாட்ஸ்ஆப் மூலமாக தனது குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார்.

இதனை கண்டு கடும் மனவேதனையுற்ற அவரது குடுபத்தினர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் சென்று முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பான விவரங்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இன்னும் இரண்டு தினங்களில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உறுதியளித்துள்ளனர்.

ஆடியோவை கேக்க முடியாமலும், மகன் கஷ்டபடும் புகைப்படத்தை பார்க்க முடியாமலும் மரண வலியால் அவதியுறுகிறார் வீரப்பனின் தாயார்.