நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு வந்த சோதனை!!

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பினை முழுமையாக குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர்களின் பாதுகாப்பு 2 பேர் வரை மட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒருவருக்கு, 7 பேர் பாதுகாப்பு வழங்கிய நிலை தற்போது 2 பேராக குறைக்கப்பட்டுள்ளது.இன்று முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.