மகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட தந்தை: விபரீத பின்னணி

ஜிம்பாப்வேயில் மகளை திருமணம் செய்து கொண்ட தந்தைக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வும்பா பகுதியை சேர்ந்தவர் டேவிட் முசம்படிட்டீ. இவர் தனது மனைவி மற்றும் 14 வயது மகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் மகள் மீது தவறான எண்ணம் கொண்ட டேவிட் அவரை திருமணம் செய்ய திட்டமிட்டார். இதற்கு டேவிட்டின் அண்ணியும் உதவ முன்வந்தார்.

இதையடுத்து மகளின் விருப்பத்தை மீறி அவரை கட்டாயப்படுத்தி டேவிட் திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறிய நிலையில் இருவரும் பொலிசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து டேவிட் மற்றும் அவர் அண்ணியை பொலிசார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பின்னர் இருவருக்கும் நான்கு மாதம் தண்டனை குறைக்கப்படுவதாக நீதிபதி மீண்டும் அறிவித்தார்.