அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! பல உயிரை காப்பாற்றி தன்னுயிரை இழந்த பெண்..!
டெல்லியை அடுத்த குர்கானில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல உயிர்களை காப்பாற்றி, தன்னுயிரை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டில்லி அடுத்துள்ள குர்கான் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 45 நிமிடங்கள் கழித்து, தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, அந்த கட்டிடத்தில் 5வது மாடியில் குடியிருந்த ஸ்வாதி கார்க்(32) என்ற கட்டட வடிவமைப்பாளர், தீவிபத்து ஏற்பட்ட உடன், ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களையும் உஷார்படுத்தி வீட்டை விட்டு அந்த கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.
ஆனால், நீண்ட நேரமாகியும் ஸ்வாதி மட்டும் மாடிக்கு வரவில்லை. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர், தீ அணைப்பு வீரர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின் வீரர்களும் தேடி பார்த்தனர்.
இந்நிலையில், 10 ஆவது மாடியில் ஸ்வாதி இறந்த நிலையில் கிடந்தார்.
சுவாதி கதவை திறக்க முடியாமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அந்த கட்டிடத்தில் உள்ள பல உயிர்களை காப்பாற்றிய சுவாதி தன்னுயிரை இழந்தது மிகவும் வருத்ததற்குறியதாகும்.