மோடி பதவிக்கு ஆபத்து..! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மோடி பதவிக்கு ஆபத்து..! நாளை மறுநாள் நடக்க போகும் சம்பவம்..! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ரஃபேல் ஊழல் குறித்த வழக்கை விசாரிக்கும் மனுவை, உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் செய்ததில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக, காங்கிரஸ் கட்சியினர் கடுமையான குற்றம்சாட்டினார். இது குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என்று என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கோரினர். ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்து விலை மற்றும் கூடுதல் தகவல்களை வெளியிடமாட்டோம் என்று பாஜக தெரிவித்தது.

இந்நிலையில், ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பான முழு தகவல்கள், காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் பாஜக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலை உள்ளிட்டவற்றை அனைத்து தகவலையும், சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை வினீத் தன்டா என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.

இதை அடுத்து, இந்த வழக்கை ஏற்றுக்கொள்வதாக உச்ச நீதிமன்றதின் புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்கே கௌல் மற்றும் நீதிபதி கேஎம் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு வரும் 10-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கை விசாரித்து முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் மோடி பதவி விலகும் அளவிற்கு பாஜகவிற்கு ஆபத்து வர இருக்கிறது.