திடீரென முடக்கப்படும் முகநூல் கணக்குகள்..! மோடியின் சூழ்ச்சியா..! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!
கடந்த 1 மாதமாக இந்தியாவில் பலரது முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக தமிழர்களின் கணக்குகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் கூட ஒரு இணையதள செய்தியாளர் ஒருவர் கூறுகையில், நாங்கள் மிகவும் பிரம்பலமான இணையதள செய்தி நிறுவனத்தை வைத்துள்ளோம். அவ்வப்போது அனைத்து செய்திகளையும் உண்மையுடன், நேர்மையுடனும் எங்களது முகநூல் செய்தி பக்கத்தில் பதிவிட்டு வருகிறோம். இத்தனை வருடங்களாக எங்கள் முகநூல் பக்கத்தில் எந்த பிரச்சனையும் வந்தது இல்லை. ஆனால் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட செய்தி பக்கத்திற்கு எடிட்டராக இருக்கும் முகநூல் கணக்குக்காக தானாக முடங்கி விடுகிறது. புதிய கணக்குகள் உருவாக்கப்பட்டாலும் அனைத்து கணக்குகளும் முடங்கி விடுகிறது என அவர் தெரிவித்தார்.
அதேபோல், ஜனதா கா ரிபோர்டர் (Janata Ka Reporter) என்ற இணையதளத்தில் பணிபுரியும் ரிஃபட் ஜாவத் மற்றும் காரவான் டெய்லி ஆகியோரின் முகநூல் கணக்குகளும் முடக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. மேலும் அவரது இணையதளத்தில் பணிபுரியும் பல பத்திரிகையாளர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பத்திரிகையாளர் ரிஃபட் ஜாவத் தெரிவிக்கையில், தன் முகநூல் கணக்கில் ராஃபேல் ஊழல் குறித்து முதன் முதலில் எழுதிய நேரத்தில் தன் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் பின் மீண்டும் அயோத்தி தீர்ப்பு வெளியான பின் மீண்டும் தன் முகநூல் கணக்கு செயல்படாமல் போனதாகவும் தெரிவித்தார்.
இதேபோல டைனிக் பாஸ்கர் (Dainik Bhaskar) செய்தித்தாளின் எடிட்டர்களாக பணிபுரியும் பலரின் கணக்குகளும் முடக்கப்பட்டன.
அதேபோல் பொல்டா ஹிந்துஸ்தான் (Bolta Hindustan) நிறுவன ஊழியர்கள் 5 பேர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலோனோர் இணைய ஊடகங்களில் குறிப்பாக சமூக வலைதளங்களின் மூலமாகவே செய்திகளை வாசிக்கிறார்கள். இந்நிலையில் முகநூல் கணக்குகள் முடக்கப்படுவதால் பல இணையதள செய்தி நிறுவனங்கள் தங்களின் வாசகர்களை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
முகநூல் கணக்குகள் முடக்கப்படுவது குறித்து, இந்தியாவின் முகநூல் தகவல் தொடர்பு இயக்குநர் அம்ரித் அஹுஜாவிடம் விளக்கம் கேட்டு 48 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் தற்போது வரை எந்த பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவிற்கு எதிராக எழுதுபவர்களின் கணக்குகள்தான் முடக்கப்படுவதாக பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.