நித்யானந்தா அவர்களின் விசித்திர வீடியோ!. இந்த உலகத்தை ஆள்பவர் அவர் தானாம்!.

நித்யானந்தா அவர்கள் மீது பல வழக்குகள் இருக்கின்றன. ஆனாலும் அவரை குறுவென வணங்கும் பல பக்தர்கள் இருக்கின்றனர். தற்போது இணையதளத்தில் சாமியார் நித்யானந்தாவின் புதுவிதமான பாடல் ஒன்று வைரலாகியுள்ளது.

அந்த பாடலில் தமிழ் வார்த்தைகளும், ஆங்கில வார்த்தைகளும் கலந்து நித்யானந்தாவை பற்றி புகழ்கின்றனர். இந்த பாடலை பாட பாட, நித்யானந்தா சிரித்தபடியே நின்றுகொண்டிருக்கிறார். ஆனாலும் இந்த பாடலில் பல கிராபிக்ஸ்கள் செய்யப்பட்டுள்ளது என தெரிகிறது.

அந்த வீடியோவில் திடீர் திடீரென்று அவரது கையை ஆசி வழங்குவதுபோல மேலே தூக்குகிறார். அப்போது கையிலிருந்து புகை வெளியேறுகிற போன்ற காட்சிகளும் தெரிகிறது.

இந்த உலகையே ஆளக்கூடியவர் என்ற வரிகள் வருகிறது. அதற்கு நித்யானந்தாவுக்கு பின்னால் பூமி சுழல்கிறது, நிலங்கள் தாறுமாறாக ஓடுகின்ற போன்ற காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது