நான் நல்ல தலைவனை உருவாக்குவேன்! – ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மக்கள் பாதை அமைப்பு சார்பில் தமிழ் கையெழுத்து திருவிழா நடைபெற்றது. அந்த விழாவில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் தொடங்கி வைத்து பேசினார்.

சகாயம் ஐஏஎஸ் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் மிகவும் எளிமையான அதிகாரி.

அவர் பணியாற்றிய மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளாலும் நேர்மையான அணுகுமுறைகளாலும் மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டவர். தனது சொத்துக் கணக்குகளை வெளியிட்ட முதல் தமிழக ஐஏஎஸ் அதிகாரியாவார்.

தமிழ் கையெழுத்து திருவிழாவில் கலந்துகொண்ட ஐஏஎஸ் சகாயம் அவர்கள் பேசுகையில், தாய்மொழி கல்வி நம்மிடமிருந்து விலகிப்போவதை வேதனையோடு பார்க்க வேண்டியுள்ளது.

மேலும் தற்போது தமிழ்வழி கல்வியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக குறைவு என்பது உண்மை. அரசுக்கு தமிழ் மொழி கல்வியை காப்பாற்றும் கடமை உள்ளது என கூறினார்.

நான் தலைவர் ஆக மாட்டேன், நல்ல தலைவர்களை உருவாக்குவேன். அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான ஆங்கிலம் மக்கள் பாதை அமைப்பு முலம் கற்பிக்கப்படும் என கூறினார்.