திருமணத்திற்கு பின் தெரிந்த போன ரகசியம்: சடலமாக கிடந்த இளம்பெண்

அகமதாபாத்தில் திருமணமான 5 மாதங்களிலே இளம்பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தில் சூரத் பகுதியை சேர்ந்தவர் Nayna (26). இவர் கடந்த மே 14-ம் தேதியன்று பெற்றோருக்கு கூட தெரியாமல் ரவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற பெண் திருமணம் செய்துவைத்தார்.

திருமணம் முடிந்து 5 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், Nayna கழுப்பூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சடலமாக கிடந்துள்ளார்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் Nayna விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதும், அவருடைய கணவர் மட்டும் உயிர் பிழைத்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக Nayna-வின் தந்தை தினேஷ் சோலங்கி பொலிஸார் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில், எங்களுடைய குடும்பத்திற்கு கூட தெரியாமல் ஜெயஸ்ரீ என்பவர் தான் திருமணம் செய்து வைத்துள்ளார்.

அதன் பின்னர் என்னுடைய மகள் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்ததும், தினமும் கொடுமைப்படுத்தியதோடு விவாகரத்து செய்யுமாறு, அவருடைய மாமியார் ரவியை தொந்தரவு செய்துள்ளார். அதன் பின்னர் ரவி கடந்த 22-ம் தேதியன்று என்னுடைய மகளுக்கு விவாகரத்து கொடுத்துவிட்டார் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரவியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், சம்பவம் நடைபெற்ற அன்று ரவியும், Nayna உடன் இருந்துள்ளார். இருவருமே விஷம் அருந்தியுள்ளனர். ஆனால் இதில் Nayna மட்டும் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்