இயக்குநர் மணிரத்தினத்திற்கு மிரட்டல்!. அதிர்ச்சி காரணம்!

இயக்குநர் மணிரத்தினத்தின் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. யாரோ ஒரு மர்ம நபர் தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

செக்கசிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க சொல்லி மிரட்டல் விடுத்ததாக மணிரத்னம் புகார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.