விஜய்யுடன் நடித்தால் போதும்: அதன் பிறகு தற்கொலை செய்வேன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இளம் நடிகர், நடிகைகள் என அனைவருக்குமே இருக்கும். இந்நிலையில் தற்போது இளம் நடிகை ஒருவர் விஜயோடு நடித்தால் மட்டும் போதும் அதன் பின்னர் தற்கொலை கூட செய்து கொள்வேன் என கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

தமிழில் பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் அக்காவான சஞ்சனா கல்ராணி கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வருகிறார். பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் இளைய தளபதி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தளபதி விஜய் மிகவும் கியூட்டாக அழகாக இருப்பார். அவருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு அது மட்டும் நடந்து விட்டால் போதும் அதன் பின்னர் நான் அடுக்கு மாடி மேல் இருந்து குதித்து கூட தற்கொலை செய்து கொள்ள தயார் என கூறியுள்ளார்.