பாலாஜிக்கு அமைதியாக மகள் வாங்கிய இரண்டு சத்தியம், அதிரடியாக மனைவி போட்ட கண்டிஷன்.!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் 2 .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் எந்த ஒரு பொழுதுபோக்கும் இல்லாமல் ஓர் வீட்டில் இருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பங்கு பெற்றனர்.

இதில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்பட்டு இதுவரை 10 பேர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த், பாலாஜி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா,ஜனனி என 6 போட்டியாளர்களில் இந்த வாரம் 2 பேர் வெளியேற உள்ளதாக நிகழ்ச்சிக்குழு அறிவித்தது.

மேலும் இதில் இறுதி கட்டத்திற்கு நேரடியாக டாஸ்க்கில் ஜனனி வெற்றி பெற்று ஃபைனலுக்கு செல்வதற்கான டிக்கெட்டை பெற்று இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் ஜனனி தவிர, மற்ற 5 பேர் இந்தவார எவிக்‌ஷன் பட்டியலில் இருந்தனர்.

இதில், முதல் கட்டமாக நேற்று போட்டியிலிருந்து பாலாஜி வெளியேற்றபட்டார்.

அப்பொழுது வெளியே வந்த பாலாஜி கமல்ஹாசனிடம் பேசியபோது போது, குடியை விடவேண்டும் என கமல் கூறினார்.

அப்போது, பேசத் தொடங்கிய பாலாஜி போஷிகா நான் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போது என்னிடம் இரண்டு சத்தியம் வாங்கினார்.

ஒன்று கெட்டவார்த்தை பேசக்கூடாது ,மற்றொன்று, குடிக்கக் கூடாது
இப்பொழுது தான் என் குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என எனக்கு தெரிகிறது. தயவுசெய்து என்னைப் போன்று யாரும் இருக்காதீர்கள் யானா பாலாஜி கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் அப்போது, நித்யா, இன்னும் 100 நாட்கள் வெளியே ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. அதில் வெற்றி பெற்றால் தான் முழுமையாக பாலாஜியை ஏற்றுக் கொள்வேன் எனத் தெரிவித்தார்.
இது ரசிகர்களிடையே மற்றொரு அதிர்ச்சியாக இருந்தது .