வைரலான நிலானி – காந்தி செல்போன் உரையாடல்!

நடிகை நிலானி தனது காதலர் காந்தி லலித்குமாருடன் பேசிய ஆடியோ உரையாடல் வெளியாகியுள்ளது.

அந்த உரையாடலில் தற்கொலை செய்துகொண்ட காந்தி லலித்குமார், உலகமே நீதான் என நினைத்து வாழ்கிறேன், இப்படி பண்ணீட்டியே என கூறுகிறார்.

அதற்கு நிலானி, நீ கொடுத்த வலிகள் எனக்கு அதிகம் என்கிறார்.

பதிலுக்கு, என்னை பொலிஸ் நிலையத்தில் எப்படி அடித்தார்கள் தெரியுமா. ஷீ காலால் 25 முறையாவது என்னை அடித்திருப்பார்.

அதற்கு, நிலானி சத்தியமாக இது எனக்கு தெரியாது. அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது உன்னை அடிப்பதற்கு. நீங்கள் அவர்களிடம் கோவமாக நடந்துகொண்டீர்களா என கேட்கிறார்.

காந்தி: நான் சிங்கம் மாதிரி வாழ்ந்தேன், உன் மேல எந்த பழியும் நான் போடமாட்டேன். உன்கூட பழக்கம் இருந்ததா என பொலிஸ் ஒருவர் கேட்டார். நீ என் தோழி மட்டும் என்றுதான் சொன்னேன், உன்னை பற்றி தவறாக நான் எதுவும் சொல்லவில்லை.

நிலானி: நானும் என்னைபற்றி தவறாக சொல்லவில்லை, நீ என்னை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்துகிறாய்.என்னை அவரிடம் இருந்து விலக்கிவைங்கள் என சமீபத்திய பிரச்சனைகளை மட்டுமே புகாராக எழுதிகொத்தேன், முன்னால் நடந்த பிரச்சனைகளை எழுதிகொடுக்கவில்லை.

காந்தி: எனக்கு ஒன்னுன்னா நீ வரமாட்டாயா?

நிலானி: நான் வரமாட்டேன்.

காந்தி: இல்லை நீ வருவாய் …அம்மு

நிலானி: வண்டியை எடுத்துக்கொள், நீ ஒழுங்காக இரு. தற்கொலை முடிவு எதுவும் எடுத்துக்காதே. உன்னுடையே சைக்கோதனமான இந்த குணத்தால் நான் பிரிந்து சென்றேன் என கூறுகிறார்.