மூன்று பாடசாலை மாணவிகள் இன்று காலை திடிரென மயங்கி வீழ்ந்த சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இல.2 பாடசாலையில் கற்கும் மாணவிகளே இவ்வாறு மயங்கி வீழ்ந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.மாணவிகள் மூவரும் பிஸ்கட் உண்ட பின்னரே மயங்கி வீழ்ந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த
மாணவிகள் மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.