கொழும்பே கொந்தளித்த போது ஜனாதிபதி என்ன செய்தார்?

அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பு நகரம் கொந்தளித்து கொண்டிருக்க ஜனாதிபதி அமைதியாக  பத்திரிக்கைகளை வாசித்து கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பாராளுமன்றுக்கு இன்று சென்றிருந்த ஜனாதிபதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பத்திரிகைகளை அமைதியாக பார்த்து கொண்டிருப்பதை அங்கிருந்த சிலர் புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

கூட்டு எதிரணியின் எதிர்ப்பு பேரணியால் கொழும்பின் பல பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் கூடியுள்ளனர்.