மதுவால் நிறைந்த மஹிந்தவின் “ஜனபலய கொலம்பட்ட; வெளியாகிய ஆதாரங்கள்!

ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொள்வதற்காக கொழும்பில் உள்ள தோட்ட குடியிருப்பு வாசிகளில் ஒருவருக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் பணம், சாப்பாட்டுப் பொதி மற்றும் ஒரு போத்தல் மதுபானம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களினால் இவ்வாறு சிறப்பு சலுகைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள தோட்டக் குடியிருப்பு மக்களை பேரணிக்கு அழைத்து வரும் பொறுப்பு கொழும்பு மாநகர சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ளும் ஒரு நபருக்கு 5 ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் செலவுகளை மதிப்பீடு செய்துள்ளதாக பேசப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக குறித்த ஆர்ப்பாட்டத்துக்கு வைத்திருந்த பல நபர்கள் குடிபோதையில் வீதியில் விழுந்து கிடக்கின்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.