கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று தெல்லிபழை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடன் கொடுக்கல் வாங்கலின்போது ஏற்பட்ட தகராறே கத்திக் குத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.யாழ்ப்பாணம் தெல்லிப்பழை, வீமன்காமத்தைச் சேர்ந்த 31 வயதுப் பெண் ஒருவரே கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளார்.அயலில் உள்ள குடும்பம் ஒன்றுக் கொடுத்த கடனை மீளக் கேட்ட போதே அவர் கத்திக்குத்துக்கு இலக்கானார் எனக் கூறப்படுகின்றது.வயிற்றில் காயமடைந்த நிலையில் மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.எனினும், நேற்று இரவுவரை பொலிஸாரால் இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.