கடனை திருப்பிக் கேட்கச் சென்ற கர்ப்பிணி மீது யாழ்ப்பாணத்தில் கத்திக் குத்து!!

கத்­திக் குத்­துக்கு இலக்­கான நிலை­யில் கர்ப்­பி­ணிப் பெண் ஒரு­வர் நேற்று தெல்­லி­பழை மருத்­து­வ­ம­னை­யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடன் கொடுக்­கல் வாங்­க­லின்­போது ஏற்­பட்ட தக­ராறே கத்­திக் குத்­துக்­குக் கார­ணம் எனக் கூறப்­ப­டு­கின்­றது.யாழ்ப்பாணம் தெல்­லி­ப்பழை, வீமன்­கா­மத்­தைச் சேர்ந்த 31 வய­துப் பெண் ஒரு­வரே கத்­திக் குத்­துக்கு இலக்­கா­கி­யுள்­ளார்.அய­லில் உள்ள குடும்­பம் ஒன்­றுக் கொடுத்த கடனை மீளக் கேட்­ட ­போதே அவர் கத்­திக்­குத்­துக்கு இலக்­கா­னார் எனக் கூறப்­ப­டு­கின்­றது.வயிற்­றில் காய­ம­டைந்த நிலை­யில் மருத்­து­வ­னை­யில் சேர்க்­கப்­பட்ட அவர் மருத்­து­வர்­க­ளின் தொடர் கண்­கா­ணிப்­பில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் தெல்­லி­ப்ப­ளைப் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது.எனி­னும், நேற்று இர­வு­வரை பொலி­ஸா­ரால் இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என பொது­மக்­கள் விச­னம் தெரி­வித்­துள்­ள­னர்.