பசியினை தூண்ட உதவும் வஜ்ரவல்லி

ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரமான பிரண்டை அதிக சதைப் பற்றும் வடிவில் நாற்கோணமான தண்டுகளளை கொண்டது. அதன் மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை.

உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே இதனை அனைவரும் வஜ்ரவல்லி என்று அழைகின்றனர்.

பிரண்டையில் பல விதமான வகைகள் உள்ளன. அவை சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப்படும். சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். இதனையே நாம் பொதுவாக உபயோகின்றோம்.

பிரண்டையின் நன்மைகள்
  • பிரண்டையின் முக்கியமான நன்மைகளில் ஒன்று பசியின்மையைப் போக்குவது. பசியின்மை இன்றி வடுபவர்களுக்கு பிரண்டை ஒரு சிறந்த உணவாகும். பிரண்டைடையை தினமும் உணவில் சேர்த்து உண்பதின் மூலம் நல்ல பசியைத் தூண்டும் வலிமை மிக்கது.
  • இரத்த மூலம் மற்றும் வயிற்றுப் பூச்சிகளையும் அழிக்க பிரண்டைத் தண்டின் மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தேவையான அளவு நெய்யில் வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்க வேண்டும்.
  • பின்பு அதனுடன் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர இரத்த மூலம் குணமாகும்.
  • உடல் சுறுசுறுப்பு அதிகரித்து ஞாபக சக்தி பெருக்க நமது அன்றாட உணவில் பிரண்டைத் துவையல் சேர்த்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.
  • நம்மில் சிலருக்கு பல விதமான உணவுகளை சாப்பிட்டாலும் நாக்குச் சுவையின்மை இருக்காது. இதனை சரிசெய்ய நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட வேண்டும்.
  • பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்காக வர பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வருவது நல்லது.
  • பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்
  • பிரண்டையின் வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை வேளைகளில் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும்.
  • அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.