பிக்பாஸ் வீட்டில் கம்பீர குரலிடம் அசிங்கப்பட்ட கமல்… முதல் போட்டியாளராக களமிறங்கிய “அந்த” நடிகை

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிரபல ரிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் அமோக வரவேற்புடன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இரண்டாவது சீசனையும் தொகுத்து வழங்கும் கமல் தனது அரசியல் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறேன் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.

பின்பு பிக்பாஸ் வீட்டிற்குச் சென்ற கமல் அங்குள்ள நீச்சல் குளத்தினை அவதானித்து பணக்காரர்கள் குளிக்கும் குளோரின் குட்டை தான் இந்த நீச்சல் குளம் என்று கூறியுள்ளார்.

அதன் பின்பு வீட்டினை சுற்றிப் பார்த்த கமலை கம்பீரக்குரல் கன்பெஷன் அறைக்கு வரவழைத்தது. உள்ளே சென்ற கமல் கம்பீர குரலிடம் எப்படி இருக்கீங்க என்று கேட்க உடனே கம்பீர குரல் பிக்பாஸ் இரண்டாவது சீசனுக்கு உங்களை வரவேற்கிறோம் என்று கூறியது.

மீண்டும் கமல் கேட்ட அதே கேள்விக்கு கம்பீர குரல் நீங்கள் சென்று வரலாம் என்று கூறிவிட்டது. சற்று தர்மசங்கடத்திற்கு உள்ளாகிவிட்டார் கமல்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நாயகி யாஷிகா ஆனந்த் சொப்பன சுந்தரி பாடலுக்கு நடனமாடிய படி முதல் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். வெறும் 18 வயதே ஆகும் இவர் பிக்பாஸை என்ன செய்யப்போகிறார் என்ற எண்ணம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.