யாழில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட வெசாக் வலயம்!

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட வெசாக் வலயம் நேற்று திறந்துவைக்கப்பட்டது.

“யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்” எனும் பெயரில் யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக இந்த வெசாக் வலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வுகள் தொடர்ந்து 3 நாட்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.