உங்கள் இராசிக்கு அழகான மனைவி கிடைப்பாளா? எப்படிதெரிந்து கொள்வது?

உடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி  கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும்.அனைவருக்கும் இப்படி அமைவது சாத்தியமற்றது. அழகை ரசிக்க தெரியாதவர்களுக்கு தான் அழகான மனைவி கிடைப்பார்கள் அதாவது ‘திங்க தெரியாதவனுக்கு தான் பன்னு கிடைக்கும்’ என்பது போல.அதே போல சில சுமார் மூஞ்சி குமார்களுக்குதான், நயன்தாரா போன்ற அழகான அறிவான பெண்கள் அமைவார்கள். இதெல்லாம் அவரவர் செய்த புண்ணியம் போல. ஜாதகத்தில் கட்டம் சரியாக இருந்தால், நீங்கள் கட்டம் கட்டாமலே அழகான பெண் உங்களுக்கு அமையுமாம்.

ஏழாம் இடத்தில் சுப இருத்தல் குரு சுக்கிரன் புதன் வளர்பிறை சந்திரன் போன்றவர்கள் அமர்தல் பாவர்கள் பார்க்காமல் இருத்தல் போன்றவை அழகான அறிவான மனைவிஃகணவன் அமைய வாய்ப்புள்ளதாம்.உஷாரான ஆள்தான் நீங்கள்: ரிஷபம் மற்றும் துலாம் ராசிக் காரர்கள் அனுபவிக்க பிறந்தவர்கள். இந்த உலகில் இவர்களுக்கு வாய்க்கும் அனைத்தையும் அனுபவித்து, இரசித்து வாழ்வார்கள். உணவாக இருந்தாலும் கூட நல்ல ருசியாக இருக்க வேண்டும். சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த இராசிக் காரர்கள்.

ரிஷப இராசிக் காரர்கள் மிகவும் உஷாராக இருப்பார்கள் இந்த விஷயத்தில். அதனால் இவர்களுக்கு அழகான மனைவி/ கணவன் கிடைப்பது நிச்சயம்.காதல் திருமணம்: தனுசு, துலாம், கடகம், இராசிக் காரர்கள் ஆண், பெண் விஷயத்தில் பெரிய ஆய்வாளர்களாக இருப்பார்கள். ரசனையான ஆட்கள், புன்னகை பேச்சு கண்கள், மூக்கு, என ஒவ்வொரு பாகத்தையும் ரசித்து காதலித்து திருமணம் செய்பவர்களாக இருப்பார்கள் இவர்கள்.மகரம் கும்பம் சிம்மம் மேசம் விருச்சிகம் போன்ற இராசிக் காரர்கள் எல்லாம் இஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று கூறுவதை விட மிகவும் கஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று கூறலாம். இதை ஜோதிடமே சொல்கிறது.

நல்ல நேரம் வந்தால் திருமணம் நடக்கும். இவர்கள் ஒருபக்கம் வேலையை பார்க்க சுப லக்னம் ஏழாமிடத்தில் இருந்தால் இவர்களுக்கும் அழகான வாழ்க்கை துணை அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.கன்னி, மீனம் இராசிகாரர்களுக்கும் மிதுனம் இராசிகாரர்களும் எதுவாக இருந்தாலும் கணக்குப் போட்டுப் பார்த்து செயலில் இறங்குபவர்கள். இவர்கள் இவர்களுக்கான துணையை தேர்வு செய்வதிலும் கூட இவ்வாறு தான் இறங்குவார்கள்.

ஒருவரது குணாதிசயங்கள் அவரது குடும்பம் என எல்லார் பற்றியும் தெரிந்துக் கொண்டு தான் திருமணம் செய்துக் கொள்ள இறங்குவார்கள். இவர்களுக்கு அழகு என்பது இரண்டாம் பட்சம் தான். அறிவும், திறமையும் தான் இவர்கள் எதிர்பார்ப்பது.

குறிப்பு:

இவை யாவும் பொதுவான குறிப்புகள் தான். ஜாதகத்தில் நான்காம் இடம் வலுத்தவர், 7 ஆம் இடத்தை சுப பார்வை செய்பவர். சுக்கிரன், குரு வலிமையான நிலையில் உள்ளவர்களுக்கு அழகான கணவன்ஃமனைவிதான் அமையும்.