கர்ப்பிணி மகளை கழுத்தை நெரித்து கொன்ற பெற்றோர்!

இந்தியாவில் கர்ப்பிணி மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் சொனாரியா கிராமத்தை சேர்ந்த நய்னா பானுபாய் (25) என்ற பெண் தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த நவம்பரில் பிரகாஷ் பிரேம்ஜி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர் தனது வீட்டாருக்கு தெரியாத வகையில் கணவர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.

தற்போது மூன்று மாத கர்ப்பிணியான நய்னா இரு தினங்களுக்கு முன்னர் தனது மாமியார் கெளரிபென்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது நய்னாவின் பெற்றோர்களான நஞ்சிபாய், ஹன்சாபென் மற்றும் சகோதரர் பாகுல் ஆகியோர் நய்னாவை பார்த்துள்ளனர்.

இதையடுத்து நய்னாவை வலுக்கட்டாயமாக தங்கள் வீட்டுக்கு கூட்டி சென்றுள்ளனர். பின்னர் நய்னா கிராம எல்லையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் நய்னாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

நய்னாவின் பெற்றோர் மற்றும் சகோதரர் தான் தன் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டதாக பிரகாஷ் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

தற்போது மூவரும் தலைமறைவாக உள்ள நிலையில் பொலிசார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.