கடன் தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி?

நீண்ட நாட்களாக கடன்கள் அடையாமல் அவதிப்படுபவர்கள், கொடுத்த கடனை வசூலிக்க முடியாதவர்கள் பலரும் கவலைப்படுகின்ற விடயம் எப்படி இதில் இருந்து மீளப்போகின்றோம் என்பதுதான்.

அப்படியானவர்கள் உங்கள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு திரியிட்டு வடக்கு நோக்கி வைத்து மல்லிகைப்பூ எண்ணெயில் விளக்கேற்றி, ‘நரசிம்ம பிரபத்தி’ 9 முறை கூறி வழிபட்டு வர, கடன்கள் அடைய வழி பிறக்கும்.

இதனை நீங்கள் தொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் செய்து வரவேண்டும், மேலும் இந்த பரிகாரத்தை செய்ய காலை 6.15- 7 மணி மிக சிறந்தது.

முடியாதோர், மாலை 8.15- 9 மணிக்குள் செய்யலாம், பிரார்த்தனை முடிவில் நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்வது அவசியம்.

குறிப்பு பரிகாரம் செய்யும் நாளில் முட்டை முதற்கொண்டு அசைவம் முற்றிலும் தவிர்க்கவும்.