நீண்ட நாட்களாக கடன்கள் அடையாமல் அவதிப்படுபவர்கள், கொடுத்த கடனை வசூலிக்க முடியாதவர்கள் பலரும் கவலைப்படுகின்ற விடயம் எப்படி இதில் இருந்து மீளப்போகின்றோம் என்பதுதான்.
அப்படியானவர்கள் உங்கள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு திரியிட்டு வடக்கு நோக்கி வைத்து மல்லிகைப்பூ எண்ணெயில் விளக்கேற்றி, ‘நரசிம்ம பிரபத்தி’ 9 முறை கூறி வழிபட்டு வர, கடன்கள் அடைய வழி பிறக்கும்.
இதனை நீங்கள் தொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் செய்து வரவேண்டும், மேலும் இந்த பரிகாரத்தை செய்ய காலை 6.15- 7 மணி மிக சிறந்தது.
முடியாதோர், மாலை 8.15- 9 மணிக்குள் செய்யலாம், பிரார்த்தனை முடிவில் நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்வது அவசியம்.
குறிப்பு பரிகாரம் செய்யும் நாளில் முட்டை முதற்கொண்டு அசைவம் முற்றிலும் தவிர்க்கவும்.