பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து மோடி, தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
அத்துடன் இத்திருநாள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் பொங்கல் வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு மாநிலங்களில் அறுவடை திருநாளை கொண்டாடும் மக்களுக்கு அவர் ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். அஸ்ஸாம் மக்களுக்கு மகர சங்கராந்தி திருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குஜராத் மக்களுக்கு உத்தரயான் பண்டிகை எனப்படும் பட்டம் விடும் திருவிழாவிற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப்பில் நெருப்பு மூட்டி கொண்டாடப்படும் லோரி பண்டிகைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்து வாழ்த்துக்களையும் அந்தந்த மாநில மொழிகளில் மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு முறையும் கலாச்சார திருவிழாக்களின் போது அந்தந்த மக்களின் மொழியில் வாழ்ந்து தெரிவிக்கும் பொழுது தான் அந்த விழாவிற்கு உண்டான நிறைவான வாழ்த்தாக அமைகிறது என்பதாலேயே பிரதமர் மோடி இந்த யுக்திதியை கையாண்டு வருகிறார்.