முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வார் என சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீளவும் இணைந்து கொள்கின்றனர்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மலர்மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டுவோரும் சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்வார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் எவரும் மலர்மொட்டுடன் இணைந்து கொள்ளவில்லை.
அவ்வாறு இணைந்து கொண்டுள்ள ஒரே ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மட்டுமேயாகும்.
ஆரம்ப காலம் முதல் சுதந்திரக் கட்சியில் இவ்வாறு பலர் விலகிச் சென்றிருந்தனர். பின்னர் மன்னிப்புக் கோரி கட்சியில் மீளவும் இணைந்து கொண்டுள்ளனர்.
எனவே தற்போது விலகிச் சென்றுள்ளவர்களை மீளவும் கட்சியில் இணைத்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.