7 பேர் பலி;கொலை என சந்தேகம்

தெலுங்கானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் மர்மமான முறையில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

5a3eac21bc2ff-IBCTAMILதெலுங்கானா மாநிலம் வராங்கல் மாவட்டத்தை சேர்ந்த பால்ராஜ் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வேலை பார்த்து வந்த கோழிப்பண்ணையில் வசித்து வந்துள்ளதாகவும் அவரது இல்லத்துக்கு நேற்றிரவு பால்ராஜின் மாமனார் மற்றும் மாமியார் வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பண்ணையில் இருந்த கோழியை சமைத்து சாப்பிட்ட பின் அனைவரும் உறங்கியுள்ளதாகவும் காலையில் அக்கம் பக்கத்தினர் வேலைக்கு செல்வதற்காக பால்ராஜை எழுப்ப முயன்றபோது,குடும்பத்துடன் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இரவு சமைத்து சாப்பிட்ட கோழிக்கறி விஷமாக மாறியதா? அல்லது கடன் தொல்லையால் பால்ராஜ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டாரா? என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.