மாணவிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாடசாலைகளில் படிக்கும் மாணவிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

5a3e99eaa8470-IBCTAMILஇதனடிப்படையில் இந்திய ராணுவத்தினரின் சார்பில் பாடசாலை மாணவிகள் நாடு முழுவதும் சுற்றி பார்க்கும் வகையில் சத்பாவனா யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக,ஜம்மு காஷ்மீரில் படித்து வரும் பள்ளி மாணவிகள் சிலர் சத்பாவனா யாத்திரையாக டெல்லி வந்த அவர்கள் இன்று பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவிகளிடம் சுத்தமான இந்தியா திட்டம் குறித்தும்,யோகாசனத்தின் பலன்கள் குறித்தும் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளதாகவும் அதன்பின் அவர்கள்,பிரதமர் மோடியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில்,“ஜம்மு காஷ்மீர் பள்ளி மாணவிகளுடன் அவர்களது பாடங்கள் மற்றும் சுத்தமான இந்தியா திட்டம்,யோகாசனத்தின் பலன்கள் குறித்து கலந்துரையாடினேன்” என பதிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.