தமிழ் ஸ்பைடர் படத்திற்கு அடுத்து தமிழில் மகேஷ் பாபுவின் தெலுங்கு படம்.!

தமிழ் ஸ்பைடர் படத்திற்கு அடுத்து தமிழில் மகேஷ் பாபுவின் தெலுங்கு படம்.!

தற்போது தமிழ் சினிமாவில் ரீமேக் செய்யப்படும் படங்களை விட டப் செய்யப்படும் படங்கள் தான் அதிகம். நாடகங்கள் கூட டப் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடுகிறது. அந்த வகையில் எப்போதும் தெலுங்கு படங்கள் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும். ஒரு படத்தின் முன்னணி கதாநாயகிகளே மூன்று, நான்கு பேர் இருப்பார்கள்.

தமிழ் ஸ்பைடர் படத்திற்கு அடுத்து தமிழில் மகேஷ் பாபுவின் தெலுங்கு படம்.!

அந்த வகையில் மகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தா, பிரணிதா, சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா நடித்த தெலுங்கு படம் பிரம்மோற்சவம். ஸ்ரீ காந்த் இயக்கியுள்ள இந்த படத்தை அனிருத் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. பத்ரகாளி பிலிம்ஸ் சார்பில் பத்ரகாளி பிரசாத் வெளியிடுகிறார். அன்பான உறவை இழந்த நாயகன் தனது ஏழு தலைமுறை உறவுகளையும் தேடி கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை. குடும்ப படம் என்பதால் வெற்றி அடைய வாய்ப்பு அதிகம் என்று கூறினார் இயக்குனர்.