இளவரசர் ஹரியின் திருமணத்தில் பிரித்தானிய மகாராணி கலந்துகொள்ள மாட்டார்: காரணம் இதுதான்

பிரித்தானிய இளவரசர் ஹரிமற்றும் நடிகை மெர்க்கலின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், 2018 ஆம் ஆண்டு மே மாதம் இவர்களது திருமணம்கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த திருமணத்திற்குபிரித்தானிய மாகராணி எலிசபெத் கலந்து கொள்ளமாட்டார் என கூறப்படுகிறது.

ஏனெனில், மகாராணி அவர்கள் இங்கிலாந்துதேவாலயத்தின் தலைவராக இருக்கிறார். திருமணம்என்பது வாழ்க்கைகாக, விவாகாரத்தினை ஒருபோது ஊக்கப்படுத்துவது கிடையாது என்பது இந்த தேவாலயத்தின் நெறிமுறையாகும்.

அப்படியிருக்கையில், இளவரசர் ஹரி திருமணம் செய்துகொள்ளப்போகும் மெர்க்கல் ஏற்கனவதிருமணம் ஆகி விவாகரத்து பெற்றுள்ளார். எனவே, இவர்களது நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டுஇவர்களுக்கு வாழ்த்து கூறிய மகாராணி, திருமணத்தில் கலந்துகொள்ள மாட்டார் என கூறப்படுகிறது.

மாகாராணியின் மகள் சார்லஸ், தனதுமுதல் மனைவி டயானவை விவாகரத்து செய்துகொண்ட பிறகு, கமீலா என்பவரை 2005 ஆம் ஆண்டு இரண்டாவதுதிருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில்எலிசபெத் மகாராணி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என் நிலைப்பாட்டை உணர்ந்து நான்போகவில்லை என மகாராணி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது தெரிவித்திருந்தார்.