டிசம்பர் 17 ஆம் திகதி ஏற்படபோகும் பேராபத்து!!

பூமிக்கு அண்மித்த தூரத்தில் பாரிய விண்கல் ஒன்று செல்லவுள்ளதாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் எச்சரித்துள்ளன. குறித்த விண் கல் செல்வதற்கு முன்னர் அதன் சிதறல்களான விண்கல் மழையும் பொழிவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

0’பீதோன் 3200’ என அழைக்கப்படும் இந்த விண்கல்லானது சுமார் மூன்று மைல்கள் சுற்றளவினைக் கொண்டதாகக் காணப்படும். ஒவ்வொரு ஒன்றேகால் வருடத்திற்கும் சூரியனைச் சுற்றிவரும் இது பூமியிலிருந்து 6.2மில்லியன் மைல்கள் தூரத்தில் காணப்படும்.
பூமிக்கு அருகில் பயணிக்கவுள்ள பாரிய விண்கல்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

அதன்படி இந்த வருடத்தின் அடுத்த மாதம் பூமிக்கு மிக அண்மையில் குறித்த விண்கல் வருவதனால், விண்கல் மழை பொழியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே நேரம் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி குறித்த விண்கல் பூமிக்கு மிக அண்மிய தூரமான 2 மில்லியன் மைல்களுக்கு வரும் என தெரியவருகிறது.
பூமிக்கு அருகில் பயணிக்கவுள்ள பாரிய விண்கல்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

இதேயளவான பாரிய விண்கல் பூமியை மோதியதனாலேயே டைனோசர்கள் எனப்படும் தொன்மாக்கள் அழிவடைந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.