மதுரையில் 3 நாட்கள் டாஸ்மாக் இயங்காது… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

59f2474aa2fe3-IBCTAMIL

மருது பாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு 27ம் தேதி முதல் 30ம் தேதிவரை மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் வழக்கம்போல பாண்டிகை காலம் வந்துவிட்டது.

பிரசித்துபெற்ற குருபூஜையில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்டம் நோக்கி படையெடுப்பது வழக்கம். இந்நிலையில் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் விழாக்கள் நடக்கவிருப்பதால் 27ம் தேதி முதல் 30ம் தேதிவரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என அவர் தெரிவித்துள்ளார்.